எவரெஸ்ட் வேகமாக உருகி வருவதாக ஆய்வில் தகவல்!
எவரெஸ்ட்டின் உயரமான பனிமலை வேகமாக உருகி வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
மையின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த பனிப்பாறை கடந்த 25 வருடங்களில் இதுவரை 55 மீட்டர் வரையில் குறைந்துள்ளது என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த பனிப்பகுதி மீது சூரியன் ஒளி படர்வதால் உருகி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேலும் இந்த பனிப் பாறைகள் உருகினால் மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் நீர் இல்லாமல் போய்விடும் என பருவநிலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.