மனைவியை பல ஆண்களுடன் பகிர்ந்த கணவன் விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
பெங்களூரை சேர்ந்த வினய்குமார் என்பவர் ட்விட்டரில் பொய்யான கணக்கை துவங்கி அதில் தனது மனைவியுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்புவோர் தனக்கு மெசேஜ் செய்யும்படி அழைத்துள்ளார்.
அப்படி வருவோரிடம் தனது டெலிகிராம் எண்ணை கொடுத்து அதில் மெசேஜ் செய்யும்படி சொல்லும் வினய்குமார், மெசேஜ் செய்பவர்களுக்கு தனது மனைவியின் அந்தரங்க புகைப்படத்தையும் வீடியோக்களையும் அனுப்பி வைத்தும் இருக்கிறார்..
இப்படி அடுத்தடுத்து வரிசையாக ஆண்களை தொடர்பு கொள்ளும் வினய்குமார், அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிய பின், தனது மனைவியுடன் உல்லாசமாக இருக்க வீட்டிற்கு வரவழைப்பாராம்.
இதில் கொடுமை என்னவென்றால் அப்படி
வரும் ஆண்கள் வினய் குமாரின் மனைவியிடம் உல்லாசத்தில் ஈடுபடும்போது அதை பார்த்து ரசிப்பாராம் வினய். இது போன்ற பல ஆண்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார் வினய்குமார்.
இதையறிந்த ஒரு ட்விட்டர் யூசர் வினய்குமாரின் ட்விட்டர் கணக்கை பெங்களூர் போலீசாரின் கணக்குடன் டேக் செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், இது தொடர்பாக விசாரணையில் அதிரடியாக களமிறங்கினர்.
சம்பந்தபட்டவர்களை ஸ்கெட் போட்டு பிடிக்க நினைத்த போலீசார், குழு அமைத்து களத்தில் குதித்தனர். அதன்படி பொய்யான பெயரில் ட்விட்டனர் கணக்கு தொடங்கிய போலீசார், அதிலிருந்து வினய்குமாருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளனர். எதிர் முனையில் இருந்துகொண்டு தனக்கு மெஜேச் அனுப்புவது போலீஸ் என்று அறியாத வினய், அவரிடம் டெலிகிராமில் பேச சொல்லியுள்ளார்.
பின்னர் தனது மனைவியின் அந்தரங்க புகைப்படத்தையும், வீடியோவையும் அனுப்பிவைத்து, குறிப்பிட்ட தொகையுடன் தனது வீட்டிற்கு வரும் படி அழைத்துள்ளார். போலீசாரும் அவர் சொன்ன தொகையுடன் மப்தியில் அவரது வீட்டிற்கு சென்ற நிலையில், அங்கு மறைந்திருந்த போலீசார், வீட்டிற்குள் அதிரடியாக சென்று கணவன் – மனைவியை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவர் வினய்குமார் போலீசாரிடம் பல திடுக்கிடும் தகவல்கலை பகிர்ந்துள்ளார். அதில் தனக்கு பாலியல் வீடியோ பார்க்கும் பழக்கம் அதிகம் உள்ளதாகவும், குறிப்பாக அந்த வீடியோவில் சில, மனைவியை பிற ஆண்களுடன் பகிர்வது போன்று இருப்பதாகவும் சொல்லியுள்ளார்.
அதை பார்த்த தனக்கும் அந்த ஆசை வந்ததாகவும், அது குறித்து தனது மனைவியிடம் கேட்ட போது அவரும் அதற்கு சம்மதம் சொன்னதால் இந்த தொழிலை தொடங்கியதாகவும் கூறினார். அதிலும் குறிப்பாக தனது மனைவியுடன் பிற ஆண்கள் உறவு வைத்துக்கொள்வதை தான் ரசித்து பார்ப்பதாகவும், அது தனக்கு சந்தோஷத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.