வாகன விபத்தில் தந்தையும் மகளும் பலி!
கம்பஹா, அஸ்கிரிய வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் பௌசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 6 வயது சிறுமி மற்றும் 42 வயதுடைய தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் கம்பஹா உக்கல்பொட பிரதேசத்தில் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பௌசர் வாகன சாரதியின் கவனக்குறைவாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை செலுத்தியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.