உலகில் இரண்டாவது முறையாக ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்!

உலகில் இரண்டாவது முறையாக ஈராக்கில் பெண் ஒருவர் 7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றில் நடந்த பிரசவம் பலருக்கு ஆச்சரியமான செய்தியாக அமைந்துள்ளது.

பிரசவத்துக்கு சேர்க்கப்பட்ட 25 வயது பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 ஆண்கள், 1 பெண் என்று 7 குழந்தைகள் பிறந்துள்ளன. அனைத்துக் குழந்தைகளும் நலமாக உள்ளன.

பிரசவமான பெண்ணுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

“தற்போது எங்களுக்கு மொத்தம் 10 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும். இதனால் இனியும் குழந்தை பெறும் எண்ணம் இல்லை” என்று குழந்தைகளின் தந்தை தெரிவித்துள்ளார்.

ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் என்பது உலகில் இது இரண்டாவது முறையாகும். உலகில் முதல் முறையாக 1997ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *