சசிகலாவின் உடலில் இதுவரை இல்லாத அளவிற்கு சர்க்கரை அளவு அதிகரிப்பு!

சசிகலாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால் அதற்கேற்ப இன்சுலின் வழங்கப்படுவதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் நீங்கி அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4வது நாளாக செயற்கை சுவாசம் இன்றி அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

அனைத்து விதமான சிகிச்சைக்கும் சசிகலா ஒத்துழைப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து மருத்துவர்களால் கண்காணிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *