திருமண நிகழ்வில் கலந்து கொண்ட நூறுக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா!

திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கட்டானை சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 18ஆம் திகதி கொச்சிக்கடை பிரதேசத்தில் குறித்த  திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளான 30 போ் இதுவரை  அடையாளங்காணப்பட்டுள்ளதாக கட்டானை சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஏனையவர்கள் அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *