இனவெறி குற்றச்சாட்டு பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்!
2 வீரர்கள் கொடுத்த இனவெறி குற்றச்சாட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வோகன்பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார்
இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் .வோகன் இவர் மீது இரண்டு வீரர்கள் இனவெறி குற்றச்சாட்டுகளை சுமத்தியத்தி உள்ளனர். இதையடுத்து பிபிசி நிகழ்ச்சியில் இருந்து வாகன் நீக்கப்பட்டுள்ளார்.
வோகன் பிபிசி 5 லைவ் இன் ‘தி டபர்ஸ் அண்ட் வாகன் கிரிக்கெட் ஷோ’வில் 12 ஆண்டுகளாக டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
ஆனால் 2009 ஆம் ஆண்டு யார்க்சையர் போட்டிக்கு முன்னர் வோகன் தனக்கும் மற்ற வீரர்களுக்கும் எதிராக இனவெறிக் கருத்துக்களை தெரிவித்ததாக அஸீம் ரபீக்கின் இனவெறி குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து நீக்கப்பட்டு உள்ளார்.