சிறைச்சாலையில் தீ விபத்து 41 கைதிகள் உயிரிழப்பு!
இந்தோனேசியாவில் சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சுமார் 41 கைதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறைச்சாலையில் இன்றுஅதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் காயமடைந்தசுமார் 80 கைதிகள் வைத்தியசாலைகளில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் Jakarta பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்ததீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன