கொரோனா உருவான இடம் தொடர்பில் அமெரிக்காவில் ஆய்வு செய்யுமாறு சீனா வலியுறுத்தல்!
கொரோனா வைரஸ் உருவான இடம் தொடர்பில் அமெரிக்காவிலும் ஆய்வு செய்யுமாறு, உலக சுகாதார ஸ்தாபனத்திடம் சீனா வலியுறுத்தியுள்ளது.
முதன் முதலில் கொவிட் 19 கண்டறியப்பட்ட வுஹான் நகரில் உலக சுகாதார ஸ்தாபன நிபுணர்கள் குழு மேற்கொண்ட ஆய்வில், அங்குள்ள அறிவியல் மையத்திலிருந்து மனிதர்களுக்கு வைரஸ் தொற்றுவதற்கான ஆதாரங்கள் நிருபணமாகவில்லை என தெரிவித்துள்ளது.
எனினும், இந்த ஆய்வில் சீன அரசாங்கத்தின் தலையீடு இருக்கும் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பான விடயங்களில் சீனாவின் வெளிப்படை தன்மை இல்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சீனாவில் ஆய்வுகளை மேற்கொண்டதை போன்று அமெரிக்காவிலும் மேற்கொள்ள வேண்டும் என சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறானால் தான் அதன் உண்மை நிலையை கண்டறிய முடியும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது