ஐ.நாவில் இலங்கையை காப்பாற்றுங்கள்-47நாடுகளுக்கு அரசாங்கம் கடிதம்!

தமிழர்கள் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி தமிழர் தாயகத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

ஐ.நா.வில் இலங்கைக்கு இந்த முறை பாரிய நெருக்கடி ஏற்படுமென அரசியல் அவதானிகள் எச்சரித்து வரும் நிலையில்,

ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவு வழங்க கோரி இந்தியா, பாகிஸ்தான், சீனா உட்பட 47 உறுப்பு நாடுகளுக்கு அரசாங்கம் கடிதம் எழுதியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நேற்று (19) தெரிவித்தார்.

ஐ.நா கூட்டத் தொடர் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *