தப்பி ஓடிய கொரோனா தொற்றாளி கைது செய்யப்பட்டார்!
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றால் பாதிக்கப்பட்டார் என்ற நிலையில் கொஸ்கம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பி சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதான குறித்த இளைஞன் பொரள்ள பகுதியில் அமைந்துள்ள சகஸ்புர தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.