அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தாக்கம் தீவிரம்!
அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தாக்கம் தீவிரமாக உள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்த விஷேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என பண்டாரக சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய நிபுணர் நிமேஷா ரத்னவீர குறிப்பிட்டார்.
அட்டுலுகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளில் 50 % வீதமானவை பொஸிடிவாக வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை கருத்தில் கொண்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கையை தாண்டி அங்கு விஷேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என பண்டாரக சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய நிபுணர் நிரோஷா ரத்னவீர குறிப்பிட்டார்.