பேருவளை மீன்பிடித் துறைமுகத்திற்கு பூட்டு!
கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக பேருவளை மீன்பிடித் துறைமுக பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பேருவளை மீன்பிடி துறைமுக பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேருவளை மீன்பிடி துறைமுக பகுதியில் இருந்து பேலியகொடை மீன்சந்தைக்கு லொறியில் பயணித்த சாரதிகள் 10 பேர் இவ்வாறு தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேருவளை மீன்பிடி துறைமுக வளாகத்தில் சுமார் நுறு பேர் நேற்று பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.