வௌிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 14 குற்றவாளிகள் தொடர்பில் சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளது
வௌிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள குற்றச்செயல்களில் ஈடுபடும் 14 பேரை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சர்வதேச பொலிஸார் மூலம் சிவப்பு அறிவித்தல் பெற்றுள்ளனர்.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், வௌிநாடுகளில் மறைந்திருப்பதாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.