பிரேசிலை உலுக்கும் கொரோனா – 39 லட்சத்தை தாண்டியது பாதிப்பு எண்ணிக்கை
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், பிரேசிலில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 39 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.21 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது.