மக்காவில் உள்ள கஃபா தோன்றிய வரலாறு!

பூமியில் உயிரினங்கள் படைக்கப் படுவதற்க்கு முன் பூமி முழுவதும் நீரால் நிரம்பியிருந்தது
அதன் ஒரிடத்தில் நுரை தோன்றியது
பிறகு அது நாலாபக்கமும் விரிந்து கொண்டே சென்று நிலமாக மாறியது
அந்த நுரை தோன்றிய இடத்தில் தான்
நான் நிர்மானிக்கப்பட்டுள்ளேன்
உலகின் முதல் மனிதர் ஆதம்(அலை)..
அவர்கள் படைக்கப்படுவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே மலக்குகள் இவ்விடத்தில் என்னை உருவாக்கி இறைவனை வணங்கி வந்தனர் அதன் பிறகு ஆதம்(அலை).. அவர்கள் என்னை கட்டினார்கள் அதன் பிறகு நூஹ்(அலை)..
காலத்தில் ஏற்ப்பட்ட வெள்ளப் பிரளயத்தில் நான் சேதமாகியதால்
நபி இப்ராஹீம்(அலை).. அவர்கள் தம் மகனாரின் துணையோடு என்னை மீண்டும் நிர்மாணித்தார்கள்
ஐந்தாவது அமாலிக என்பவரும்  
ஆறாவதாக ஜூர்ஹூம் என்ற குலத்தாரும்  ஏழாவதாக நபி(ஸல்).. அவர்களின் ஐந்தாம் தலைமுறை பாட்டனாரான குஸைபின் கிலாப் என்பவர் என்னைக் கட்டினார்கள் எட்டாவதாக நபிகளார் நபிப்பட்டம் பெறுவதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன் அன்னாரின் 35வது வயதில் “குறைஷிகள்;” என்னை கட்டினார்கள்
ஒன்பதாவதாக நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஜூபைர்(ரழி).. கட்டினாங்க
பத்தாவதாக கலீஃபா அப்துல் மலிக் பின் மர்வானின் காலத்தில் கவர்னராக இருந்த
ஹஜ்ஜாஜ் பின் யூசுப் என்பவர் என்னை கட்டினார் மேற்க்கூறப்பட்ட ஒவ்வொருவரும் என்னை எத்தகைய அமைப்பில் கட்டினார்கள் அதற்கு முந்திய எனது அமைப்பு எப்படியிருந்தது என்பதை பற்றியெல்லாம் விரிவாகக் கூறுவதற்கு எனக்கு அவகாசமில்லை வரலாற்று நூற்களில் நீங்கள் அதனை தெரிந்நு கொள்ளலாம்
கஃபா என்றாலே சதுர வடிவக் கட்டிடம் என்று பொருள் நான் சதுர வடிவில் அமைந்திருப்பதால் இப்பெயர் எனக்கு ஏற்பட்டது சவுதியில் உள்ள ஹிஜாஜ் மாநிலதிலுள்ள மக்கா என்ற மாநகர மையப் பகுதியில் தான் அமைந்திருக்கிறேன் இவ்வூர் சவுதியின் மேற்கு திசையில் செங்கடலிலிருந்து 70மைல் தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 330மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது
உலகின் தொப்புள் ஆகவும் உலகின் மைய பகுதியாகவும் இந்நகர் திகழப்படுது
அல்லாஹூதஆலா எனக்கு சூட்டியுள்ள பெயர்கள் அல்கஃபா, அல்பைத், பைதுல்லாஹ், அல்பைதுல்ஹராம், அல்பைதுல்அதீக், கிப்லா,
எனது மொத்த உயரம் 53அடி (14மீட்டர்)
எனது நீளம்  மேற்கில்45அடி கிழக்கில்49அடி
வடக்கிலும் தெற்க்கிலும் 31அடி
எனது தென்கிழக்கு மூலைக்கு
“ருக்னுல் ஹிந்த்” எனவும்
வடகிழக்கு மூலைக்கு “ருக்னுல்யமானி”
வடமேற்கு  மூலைக்கு “ருக்னொஷ்ஷாமி” எனவும் கூறப்படுகிறது
எனது தென்கிழக்கு மூலையில் தவாஃப் செய்யும் இடத்திலிருந்து 1,10மீட்டர்
உயரத்தில் வெள்ளி வளையத்திற்குள் “ஹஜருல் அஸ்வத்” என்ற சுவர்க்கத்திலிருந்து நபி ஆதம்(அலை).. அவர்கள் கொண்டு வந்த கல் பதிக்கப்பட்டுள்ளது ஆரம்பத்தில் ஒரே கல்லாக இருந்த ஹஜருல்அஸ்வத்
ஹிஜ்ரி319ல் ஏற்ப்பட்ட ஒரு சம்பவத்தில்  உடைந்துபோய் தற்ப்போது சிறிதும் பெரிதுமாக எட்டு துண்டுகளானேன்
ஹஜருல் அஸ்வதுக்கு அருகில் 2,25மீட்டர் உயரத்தில் என்னுள் நுழைவதற்க்காக வாயில் அமைக்கப்பட்டது இதனோட கதவு முழுக்க முழுக்க தங்கத்தால் ஆனது
இக்கதவு வருடத்திற்க்கு மூன்று முறை திறக்கப்பட்டு எனது உள்பகுதியை ஜம்ஜம் நீரால் கழுவி சுத்தம் செய்வாங்க
ஹஜருல் அஸ்வதுக்கும் எனது வாயிலுக்கும் இடையுள்ள 4அடி அகலமுள்ள “சுவற்றிற்கு”” முல்தஜம்”
என பெயர் இந்த சுவற்றிலே வலது கன்னத்தையும் நெஞ்சையும் பதித்து துவாச் செய்தால் அத்ததுவா கபூலாகிவிடும்
15இடங்களில் இவ்விடம் மிக விஷேசமானதாகும்
எந்த ஒரு அடியான் இங்கே தன் தேவைகளை எண்ணி துஆச் செய்தால்
அது ஒப்பு கொள்ளாமல் இருப்பதில்லை
என ஹதீஸ் கூறுது
700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த யமன் நாட்டு மன்னர் “துப்பஉல்அஸத்” என்பவர் தான் என்னை முதன் முதலில் போர்வையாள் போர்த்தி கௌரவித்தார்
என்மீது போர்த்தப் பட்டுள்ள கருப்பு நிறதுணிக்கு “கிஸ்வா” என்று பெயர்
என் மீது போர்த்தப்படும் துணியோட எடை 670கிலோ உயர் ரக பட்டில் ஆனது இதன் மீது தங்கத்தாலும் வெள்ளியாலும் திருமறை வசனம் எழுதப் பட்டுருக்கும்
என் இரு மூலைகளுக்கும் எதிரில் அரைவட்ட வடிவில் 1,32 மீட்டர் உயருள்ள சுவருக்கு “ஹதீம்” என்ற பெயர் இதற்கு “ஹிஜ்ரே இஸ்மாயீல்”
என்றும் இன்னொரு பெயரும் உண்டு
இந்த சுவற்றின் சுற்றளவு 21;57மீட்டர்
நீளமாகும் ஆரம்பத்தில் இதுவும் என்னுடைய உட்பகுதியாகத்தான் இருந்தது குறைஷிகள் என்னை கட்டிய போது போதிய பணவசதி இல்லாததால்
முன்பு நானிருந்த அளவை விட அகழத்தில் ஆறரை முழத்தை குறைத்து விட்டனர் குறைக்க பட்ட அப்பகுதியும் என்னில் சார்ந்ததே
ஹாஜிகள் அனைவரும் அரஃபா மைதானத்தில் தங்கியிருக்கும் நாளான
துல்ஹஜ் ஒன்பதாம் நாளன்று நீங்கள் எல்லாம் ஈதுடைய நாளில் புத்தாடை அணிந்து மகிழ்வது போல நானும் ஈதுடைய நாளில் புத்தாடையுடன் காட்ச்சியளிக்கிறேன்
உயர்ந்தோன் அல்லாஹ் அவனது இல்லமான எனக்கு அளித்துள்ள சிறப்புகள் அனைத்தையும் முழுமையாக
கூறுவது எனக்கு இயலா காரியம்
120 ரஹ்மத்துகள் தினமும் பைத்துல்லாஹ்வின் மீது இறங்குது
தவாப் செய்பவர்களின் மீது 60ரஹ்மத்து
தொழுபவர்க்கு 40 ரஹ்மத்தும்
பைத்துல்லாஹ்வை பார்ப்பவர்களுக்கு 20 ரஹ்மத்தும் இறங்குகின்றன
உலகத்திலே மனிதர்கள் சுற்றி வருவதற்கு அனுமதிக்கப்பட்ட ஒரே கட்டிடம் நான் மட்டும் தான் என்பதை நினைக்கும் போது எனக்கு பெரும்மையாக இருக்கு
ஒவ்வொரு நற்க்காரியத்தையும் வலது பக்கமாக துவக்க சொல்லும் இஸ்லாம்
மிக ஈயர்ந்த கடமையான “தவாஃபை” இடது பக்கமாக துவக்க சொல்லுது
தொழுகை நேரங்கள் நீங்கலாக
இரவிலும் பகலிலும் மனிதர்கள் என்னை வலம் வந்து கொண்டே இருக்கின்றனர்
தொழுகை நடக்கும் நேரங்களில் கூட
மலக்குகள் என்னை தவாஃப் செய்கிறார்கள் 24மணி நேரமும் என்னை சுற்றி இறை வணக்க வழிபாடுகள் நடந்து கொண்டே இருக்கின்றன
எனது சிறப்புக்களைப் போன்றே எனக்கருகிலும் சற்றுத் தொலைவிலும் அமைந்துள்ள மகாமே இப்ராஹிம் “ஜம்ஜம்” கிணறு, ஸஃபா,
மர்வா மலைக் குன்றுகள், மினா, அரஃபாத், முஜ்தலிஃபா, ஹிரா மற்றும்
தௌர்குகைகள், ஹூதைபிய்யா போன்ற
இடங்கள் பாரம்பரியமிக்க வரலாற்றுச் சிறப்புகள் கொண்டவையாகும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *