இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதன்படி இலங்கையில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
குவைத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் திருகோணமலையிலுள்ள கொரோனா தடுப்பு முகாமில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 51 வயதுடைய பெண்ணொருவரே இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இவருக்கு கொரோனா வைரஸ் பரவியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.