விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் இறுதி ஜமீன்தார் காலமானார்!
ஈழப்போராட்டத்தின் ஆதரவாளரும், இந்தியாவின் இறுதி மன்னருமான நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் றி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி நேற்று காலமாகியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக முதுமையின் காரணமாக உடல் நலிவுற்றிருந்த நிலையில் நேற்றிரவு தனது 89ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.