பொதுத்தேர்தல் 14 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிப்பு வெளியாகும்!
பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் உறுதியான திகதி எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என அறியமுடிகின்றது.
சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை தேர்தல் ஆணைக்குழு தற்போது பரிசீலித்துவருகின்றது.
ஏனைய தரப்புகளுடனும் கலந்துரையாடிய பின்னரே, 14 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.