முன்னாள் ஜனாதிபதிகளின் செலவுகளுக்காக பாரிய தொகையை ஒதுக்கிய அரசு!
2023ம் ஆண்டிலும், 2022ம் ஆண்டிலும் முன்னாள் ஜனாதிபதிகளின் செலவுகளுக்காக மில்லியன் கணக்கான ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வீடுகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் பராமரிப்புக்காகவே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோருக்கு இலங்கை நிதி ஒதுக்கப்படுகின்றது.
வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அவர்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அறிவிக்கும் போது, பொது திறைசேரி அனைத்து துறைகளிலும் செலவினங்களை குறைக்கும் என பலர் எதிர்பார்த்தனர்.
2022 உடன் ஒப்பிடும்போது சில துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட பணம் சற்று குறைந்துள்ளது என்று பலர் எதிர்பார்த்திருந்தாலும், சில துறைகளுக்கு, 2022 ஐ விட 2023 க்கு அதிக பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வசதிகளை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பணமும் அவ்வாறானதொரு துறையாகும். உத்தியோகபூர்வ தரவு அறிக்கைகளின்படி இந்த வருடமும் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக மில்லியன் கணக்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.