கொரோனா வைரஸ் அபாயத்திற்குள் சிக்கிய மசாஜ் நிலையம்
கொரோனா அபாயத்திற்குள்ளும் இயங்கிய மசாஜ் நிலையம் ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்து, அங்கிருந்தவர்களை கைது செய்துள்ளனர்.
மூன்று இளம் யுவதிகளும், இளைஞன் ஒருவரும் கைதாகியுள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அந்த பகுதியை சுற்றிவளைத்ததில் மூவர் சிக்கினர். 21, 25, 27 வயதுடைய கண்டி, பண்டாரவளை, மினுவாங்கொடையை சேர்ந்த யுவதிகளும், தியத்தலாவையை சேர்ந்த 21 வயதான இளைஞனும் கைதாகியுள்ளனர்.