இலங்கையில் ஊரடங்குச் சட்டம் சில மாவட்டங்களில் மே 4 வரை நீடிப்பு

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள பொலிஸ் ஊரடங்கு மே மாதம் 4 ஆம் திகதி காலை 5 மணிவரை வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நுவரெலியா உட்பட ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் அன்றிரவு 8 மணிமுதல் அமுல்ப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் மே முதலாம் திகதிவரை இந்த நடைமுறை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *