இலங்கையில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை இன்று மாலைவரை 440 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாத்திரம் 20 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 315 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். எழுவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 247 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *