கொரோனா தடுப்பூசியை ஏற்றிக் கொண்டால் முதலையாக மாறலாம்!

கொரோனா தடுப்பூசியை மனிதன் ஏற்றிக் கொண்டால் முதலையாக மாறலாம் என்று பீதியை கிளப்பிய பிரேசில் அதிபர்

பைசர் எனும் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மனிதர்கள் முதலையாகவும் மாறலாம் என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரசை தடுப்பதற்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி நல்ல பலன் தருவது உறுதியாகியுள்ளது. இதனால், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

மேலும், தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்குமாறு பைசர் நிறுவனம் பல நாடுகளில் விண்ணப்பம் செய்துள்ளது. பிரேசில் நாட்டிலும் பைசர் நிறுவனம் தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டுவர விண்ணப்பத்துள்ளது.

எனினும், பைசர் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக பிரேசில் அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *