இலங்கையில் கொரோனா மரணம் 171 ஆக அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்று ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஐவர் 65 வயதைக்கடந்தவர்கள்.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் முதலாவது அலையின்போது 13 பேர் மாத்திரமே உயிரிழந்தனர். எனினும், 2ஆவது அலை ஏற்பட்ட பின்னர் உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.