முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் புதிய கூட்டணி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மற்றும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ரொஹான் பல்லேவத்த ஆகியோரும் இணைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
மிக விரைவில் கூட்டணியை அறிவிக்கவும் இந்தக் குழு தீர்மானித்துள்ளது என்று தெரியவருகிறது.