இலங்கை மற்றும் இந்தியர்களுக்கு இன்று சந்திரகிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்

பூரண சந்திரகிரகணத்தை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் இன்று இலங்கை மற்றும் இந்திய மக்களுக்கு கிட்டவுள்ளது.
இன்றிரவு 11.15 தொடக்கம் நாளை அதிகாலை 2.34 வரை இந்த பூரண சந்திரகிரகணம் தோன்றவுள்ளது.
நாளை அதிகாலை 12.56 அளவில் இந்த சந்திரகிரகணம் முழுமையடையவுள்ளது.
சூரியனும் சந்திரனும் பூமியும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சந்திரகிரகணம் தோன்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *