பாடசாலைகள் திறக்கும் திகதியில் திடீர் மாற்றம்! – கல்வி அமைச்சு அறிவிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல்களையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இரண்டாம் தவணைக்காகப் பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கு எதிர்வரும் 6ஆம் திகதி பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான மாணவர்களுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி பாடசாலை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக கடந்த 22ஆம் திகதி ஆரம்பமாக வேண்டிய இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *