ஜனாதிபதி வேட்பாளர் யார்? கை – மொட்டுக்குள் நீடிக்கிறது குழப்பம்!
“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளிடையே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித பொது உடன்பாடும் எட்டப்படவில்லை.”
– இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கலாநிதி ரோஹண லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்தார்.
உடன்பாடு எட்டப்பட்டதன் பின்னர் இரண்டு கட்சிகளினதும் தலைவர்களின் உடன்பாட்டுக்கமைய ஒரு வேட்பாளரை பெயரிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
கண்டிப் பிரதேசத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் மேற்கண்டவாறு கூறினார்.