‘கை’ காணாமல்போவதால் கடும் அதிருப்தியில் ‘ஜீனியர்ஸ்’!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவின் கரங்களை மீண்டும் பலப்படுத்தும் வகையில் அரசியல் முடிவுகளை எடுப்பதால் சுதந்திரக்கட்சியின் மேலும் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

பௌஸி, பியசேன கமகே போன்ற சு.கவின் மூத்த தலைவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படையாகவே பதிவுசெய்துள்ளதுடன், சுயாதீனமாக இயங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே ஏனைய சில உறுப்பினர்களும், கட்சித் தலைவரான மைத்திரிமீது கடும் சீற்றத்துடன் இருக்கின்றனர். நேற்று முளைத்த கட்சியொன்றுக்காக, பிரதான கட்சியான சுதந்திரக்கட்சியை வீழ்த்தும் வகையில் முடிவுகளை எடுப்பதாக விமர்சித்துவருகின்றனர்.
அதேவேளை, மைத்திரிபக்கமுள்ள எம்.பிக்கள் சிலரும் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் சங்கமிக்ககூடும் என அரசல் புரசலாக கதை அடிபடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *