குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கிப் பலி!

வவுனியா, பட்டக்காட்டுக் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது

திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த சுரேஸ்குமார் றொசான் (வயது -14) என்ற சிறுவனே உயிரிழந்தார்.

குறித்த சிறுவன் திருநாவற்குளம் பகுதியிலிருந்து அருகிலுள்ள பட்டக்காட்டுக் குளத்தில் குளிப்பதற்காக ஏனைய சிறுவர்களுடன் சென்று குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். அதன்போது அந்தச் சிறுவன் தண்ணீரின் ஆழத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதையடுத்து ஏனைய சிறுவர்கள் திருநாவற்குளம் பகுதியில் நின்ற இளைஞர்களுக்கு நடந்த விடயங்களைத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இளைஞர்கள் குளத்துக்குள் குதித்து நீரின் அடிமட்டத்திலிருந்த சிறுவனை 15 நிமிடங்கள் போராட்டத்தின் பின்னர் மீட்டனர். அவனை உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்தனர். எனினும், மருத்துவப் பரிசோதனையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வைத்தியசாலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *