CID கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் இருந்து குதித்த பெண்!

குற்றப்புலனாய்வுத் திணைக்கள கட்டிடத்தின் 5 ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் SSP நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த பெண் 60 மில்லியன் ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ள்தாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *