இன்று சபைக்கு வருகிறார் மைத்திரி – மஹிந்தவும் விசேட உரை
பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இன்றும் நாடாளுமன்றம் கூடவுள்ளது.சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ள சபை அமர்வில், ஜனாதிபதியும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று சபையில் விசேட உரைநிகழ்த்தவுள்ளார்.தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை ஆகியவை குறித்து பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.