விபத்தால் பரிதாபச் சாவுகள் உயர்வு; நாளொன்றுக்கு எட்டுப் பேர் மரணம்!
இலங்கையில் வாகன விபத்துகள் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 08 பேர் உயிரிழக்கினற்னர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பல வீதி விபத்துக்களுக்கு சாரதிகள் போன்றே வீதிப் பயணிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வீதி விபத்துக்களில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கள் ஓட்டுநர்களும் அதில் செல்வோரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, நடை பயணிகளும் அதிகமாக உயிரிழக்கின்ற்னர் எனவும், அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.