மதுபானசாலைகள் 10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை பூட்டு!

கதிர்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் எசல மஹா பெரஹெர இடம்பெற உள்ளதால் மதுபானசாலைகள் மூடப்பட உள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா பரவல் நிலையை கருத்தில் கொண்டு இந்த முறை வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *