மஹிந்தவின் முதுகில்ஏறி அரசியல் சவாரி செய்யும் மைத்திரியை ஆதரிக்கமாட்டேன் – வெல்கம போர்க்கொடி!
இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாகிவிடவேண்டும் என்ற பேராசையுடனேயே மஹிந்தவின் முதுகில்ஏறி அரசியல் சவாரி செய்வதற்கு மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என்று குமார வெல்கம விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
” அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என ஜனாதிபதி தற்போது தெரிவிக்கின்றார். ஆனால், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் முடிவை அவரே எடுத்தார். சுதந்திரக்கட்சியின் சார்பில் அமைச்சராக இருந்தவர்தான் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.
எனவே, செய்யவேண்டியதையெல்லாம் செய்துவிட்டு அரசியல் நலனுக்காக – பதவிக்காக மாற்றங்களை ஏற்படுத்துபவரை என்னால் ஆதரிக்கமுடியாது. களுத்துறை மாவட்டத்தில் வாழும் மக்களும் அதற்கு உடன்படமாட்டார்கள்” என்றும் குறிப்பிட்டார்.