அதிக செயல்திறன் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், உலகில் வளர்ந்து வரும் சந்தைகளில் இலங்கை ரூபாய் அதிக செயல்திறன் கொண்ட நாணயமாக மாறியுள்ளது.
புளூம்பெர்க் சந்தை தரவுகள் இதனைக் காட்டுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ப்ளூம்பெர்க் சந்தை தரவுகளின் அடிப்படையில், ஆண்டின் தொடக்கத்தில் இருந்த மதிப்புடன் ஒப்பிடுகையில் ஏழு வீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை இலங்கை ரூபாய் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.