அதிகரிக்கும் குழந்தை இறப்புகள்

உலகம் முழுவதிலும் 2022ஆம் ஆண்டின் முதல் 20 நாட்களில், 2.3 மில்லியன் குழந்தை இறப்புகள் பதிவாகியுள்ளன.

அதன்படி, ஒவ்வொரு நாளும் சுமார் 6500 பிறந்த குழந்தை இறப்புகள் நிகழ்கின்றன, இது 5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்புகளில் 47 வீதம் ஆகும்.

1990ஆண்டு முதல், குழந்தைகள் உயிர்வாழ்வதில் உலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

உலகளவில், 1990ஆம் ஆண்டில் 5.0 மில்லியனாக இருந்த புதிதாகப் பிறந்த இறப்புகளின் எண்ணிக்கை 2022 இல் 2.3 மில்லியனாகக் குறைந்துள்ளது.

மேலும், 2010ஆம் ஆண்டிலிருந்து புதிதாகப் பிறந்த இறப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளது.

முதல் 24 மணி நேரத்தில் சுமார் 1 மில்லியன் புதிதாகப் பிறந்த குழந்தைகள் இறக்கின்றன.

புதிதாகப் பிறந்த குழந்தைகளில், இறப்பிற்கான முக்கிய காரணங்கள் குறைப்பிரசவம், பிறப்புச் சிக்கல்கள் (பிறப்பு மூச்சுத்திணறல்/அதிர்ச்சி), பிறந்த குழந்தை நோய்த்தொற்றுகள் மற்றும் பிறவி முரண்பாடுகள் ஆகும், இது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஒவ்வொரு 10 இறப்புகளில் 4க்கும் காரணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *