ருமண மேடையில் தூங்கிய மணமகள்: மணமகன் வெளிப்படுத்திய அழகான எதிர்வினை

திருமண மேடையில் தூங்கிய மணப்பெண்ணை மிகவும் அழகான முறையில் எழுப்பி விட்ட மணமகனின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ

இந்தியாவில் திருமணங்கள் என்பது மிகவும் பிரம்மாண்டமானதாகவும், சடங்குகள் நிறைந்ததாகவும் இருப்பது வழக்கம், இதற்காக மணமகனும், மணமகளும் பல்வேறு சடங்குகளை செய்து ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்கின்றனர்.

அந்த வகையில் ராஜஸ்தான் முறைப்படி சமீபத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமேடையில் மணமகன் மற்றும் மணமகள் இடையே நடந்த அழகான தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமண சடங்குகள் நடைபெற்று கொண்டு இருக்கும் அந்த வேளையில் மணமேடையில் மணமகள் கண்களை மூடி உறங்கியதும், அதனை அழகாக தட்டியெழுப்பும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

இதனை @futra_baisa_banna1 என்ற இன்ஸ்டாகிராம் பயனர் தன்னுடைய சமூக கணக்கில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ஒருவர், மணமகன் எவ்வளவு அழகான எதிர்வினையை வெளிப்படுத்துகிறார் என கமெண்ட் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *