இன்று முதல் தாமரைக் கோபுரத்தில் சாகச விளையாட்டு ஆரம்பம்!

 

கொழும்பு தாமரை கோபுரத்தில் ‘பேஸ் ஜம்ப்’ என்ற சாகச நிகழ்வு இன்று(18) முதல் ஆரம்பிக்கப்படும் என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றும் நாளையும் (19) காலை 9 மணி முதல் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேற்று(17) இதற்கான முன்னோடி நிகழ்வு நடத்தப்பட்டதில் 6 சர்வதேச பேஸ் ஜம்ப் வீரர்கள் கலந்துகொண்டு சாகச நிகழ்வை நடத்தினர்.

தாமரைக் கோபுரத்தின் 29 ஆவது மாடியில் இருந்து இந்த வீரர்கள் குதித்து சாகச நிகழ்வை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *