காலியில் நடைபெற்ற மெளபிம ஜனதா கட்சியின் மாநாடு!
மமகிழ்ச்சியான தேசத்துக்கான தொழில்முனைவோர் அரசொன்றை உருவாக்கும் நோக்கில் – புதிதாக சிந்திப்போம் என்ற தொனிப்பொருளில் உருவாக்கப்பட்டுள்ள மெளபிம ஜனதா கட்சியின் முதலாவது மாவட்ட மாநாடு கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் (05.11.2023) காலி மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, பேராசிரியர் சரத் அமுனுகம மற்றும் சிரேஷ்ட தலைவர் ஹேமகுமார நாணயக்கார உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.