கொழும்பு வைத்தியசாலையில் 12 குழந்தைகளுக்கு கொரோனா!
கொழும்பு றிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் 12 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கொரோனா தொற்றுறுதியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக டெங்கு நோயினால் பாதிக்கபட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். எனவே, டெங்கு நுளம்புகளிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.