துருக்கியிலிருந்து தமது தூதுவரை வெளியேற்றுகிறது இஸ்ரேல்!
காஸா மீது இஸ்ரேல் நடத்தும் வான் தாக்குதல்களை துருக்கிய அதிபர் எர்டோகன் கடுமையாக கண்டித்துள்ள நிலையில் அந்த நாட்டிலுள்ள தமது நாட்டு தூதுவரை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன் தனது நாட்டு தூதுவர்களுக்கு வெளியேறும் உத்தரவை பிறப்பித்துள்ளதாக x பதிவில் தெரிவித்துள்ளார்.
படுகொலை என வர்ணித்த துருக்கிய அதிபர்
இதேவேளை இன்றையதினமும் காஸாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்தும் தாக்குதல்களை துருக்கிய அதிபர் “படுகொலை” என்று வர்ணித்துள்ளார்.