105 குழந்தைகளை பெற்றெடுப்பதே இலக்கு!ஒரு தாயின் சபதம்!!

 

105 குழந்தைகளை பெற்றெடுப்பதே தனது இலக்கு என்று 26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜோர்ஜியா நாட்டைச் சேர்ந்த பெண்ணே மேற்கண்டவாறு கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார்.

இவ்வாறு சபதமிட்ட அவர் ஒன்பது வயதுடைய குழந்தையை மட்டுமே பெற்றெடுத்துள்ளார் என்பதும் மற்ற 21 குழந்தைகளையும் வாடகை தாய் மூலம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

58 வயதான தனது கணவர் பல ஹோட்டல்களை நடத்தி கோடீஸ்வரராக இருக்கிறார் என்றும் தனக்கும் தனது கணவருக்கும் 105 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இலக்கு என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இன்னும் ஒரு சில வருடங்களில்
அனைத்து குழந்தைகளையும் வாடகை தாய் மூலம் பெற்று எடுத்துக் கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் இன்னும் ஒரு சில வருடங்களில் 105 குழந்தைகளை பெற்றெடுத்து விடுவோம் என்றும் அவர் கூறியிருக்கிறார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *