இனி நாட்டிற்கு பெருமை தேடி தர முடியாதே! கண்கலங்கிய தோனி

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பதற்கு முன்னதாக இனி நாட்டுக்காக விளையாடி பெருமை தேடி தர முடியாதே என பல எண்ணங்கள் தனக்குள் வந்ததாக எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்  எம்.எஸ்.தோனி விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள தோனி, ‘சர்வதேச கிரிக்கெட்டில் இருந்துதான் நான் ஓய்வு பெற்றுள்ளேன். ஐபிஎல் தொடரில் இருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை.

இனி நாட்டிற்கு பெருமை தேடி தர முடியாதே! கண்கலங்கிய எம்.எஸ்.தோனி | M S Dhoni Talk About His Retirement

காலில் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. நவம்பருக்குள் முழுவதும் நலம் பெறுவேன் என மருத்துவர் கூறியுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2019 உலக கோப்பை அரையிறுதி போட்டியுடன் என்னைப் பொறுத்தவரை நான் ஓய்வு பெற்றுவிட்டேன்.

போட்டி நிறைவடைந்த உடனே என்னுடைய உபகரணங்களை திருப்பி கொடுக்க சென்ற போதும் அதை என்னுடைய பயிற்சி நிபுணர் வாங்க மறுத்துவிட்டார். அவரிடம் இதை எப்படி கூறுவது என்று தெரியாமல் தடுமாறினேன்.

கிட்டத்தட்ட 12 முதல் 15 ஆண்டுகள் கிரிக்கெட் மட்டுமே விளையாடி உள்ளேன்.

இதனால் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பதற்கு முன்னதாக இனி நாட்டுக்காக விளையாடி பெருமை தேடி தர முடியாதே என பல எண்ணங்கள் தனக்குள் வந்தது என்று தோனி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *