பாகிஸ்தான் அணி இந்தியா செல்கிறது!

7வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 3ம்தேதி முதல் 12ம் திகதி வரை சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற உள்ளது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், கொரியா, சீனா உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்க உள்ளன.

சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின் இந்த தொடர் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியா வருவதற்கு அந்நாட்டு அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விளையாட்டு வாரியம் இதற்கான் அனுமதியை பெற்றுள்ளதாக பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் செயலாளர் ஹைதர் உசேன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி எதிர்வரும் 1ம் திகதி சென்னை வருகிறது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில், ஆகஸ்ட் 3ம் திகதி மலேசியாவுடன் ஆட உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஆகஸ்ட் 9ம் திகதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *