முஹம்மத் நபியின் பிறந்தநாள் பேரணியில் குண்டு வெடிப்பு 15 பேர் உயிரிழப்பு!

 

தென்மேற்கு பாகிஸ்தானில் மீலாதுன் நபி தின பேரணியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர்.

அத்தோடு 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“இது ஒரு தற்கொலைத் தாக்குதல் போல் தெரிகிறது” என்று மூத்த உள்ளூர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார், துணை பொலிஸ் அதிகாரியின் வாகனத்திற்கு அருகே குண்டுதாரி வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் கூறிய அவர், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லையெனவும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *