சாலே –சஹ்ரான் சந்திப்புக்கான ஆதாரம் இல்லை –சேனல் 4 அறிவிப்பு!
ஈஸ்டர் தாக்குதல் எப்படி நடந்தது என்பதை காட்டும் காணொளி சமீபத்தில் பிரித்தானியாவின் சேனல் 4 இனால் வெளியிடப்பட்டது.
அப்போது இது தொடர்பாக சர்ச்சையான சூழ்நிலை உருவானது.
இந்த வீடியோவில் சாட்சியாக ஆஜரான மௌலானா ஹன்சீர் அசாத் கூறியபடி, நாட்டின் உளவுத்துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கும், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தற்கொலைப் படைத் தீவிரவாதி சஹ்ரானுக்கும் இடையே சந்திப்பு நடந்ததற்கான ஆதாரம் தம்மிடம் இல்லை என காணொளியின் இயக்குனரும், நிர்வாக தயாரிப்பாளரும் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜெனிவாவில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.