மன்னர் சார்லஸுக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு
மன்னராட்சிக்கு எதிரான குழுவை சேர்ந்தவர்கள் மன்னர் சார்லஸுக்கு எதிராக போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்.
இது தொடர்பாக மன்னராட்சிக்கு எதிரான குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மன்னராட்சிக்கு எதிரான குழுவான ரிபப்ளிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நவம்பர் 7 அன்று லண்டனில் பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ் கலந்து கொள்கிறார்.
அந்த நேரத்தில் குழுவை சேர்ந்தவர்கள் சார்லஸுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தருணத்தில் நாம் நமது குரலை, ஆட்சேபனையை உரக்க வெளிப்படுத்துவோம்” என கூறப்பட்டுள்ளது.