திருமலையில் அதாஉல்லாஹ்-சாணக்கியன் சந்திப்பு…

 

கிழக்கு மாகாண பெட்மிண்டன் சங்கத்தினால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட பெட்மிண்டன் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் இன்று திருகோணமலையில் “மேக் ஹெயிசர்” விளையாட்டு மைதானத்தின் உள்ளக அரங்கில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா (பா.உ), சாணக்கியன் ராசமாணிக்கம் (பா.உ) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், விஷேட அதிதியாக முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளரும், பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஏ.எல்.எம் சலீம் அவர்கள் கலந்து கொண்டதுடன்,

நிகழ்வில் இன்னும் பல விளையாட்டுத்துறை உயர் அதிகாரிகளும் பிராந்திய விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *